4 மாத பச்சிளம் குழந்தை மற்றும் 5, 6, 9 வயது சிறுவர்கள் மூவருடன் வட மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-13) 147 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
யாழ். மாவட்டத்தில் - 19 பேர்காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 11 பேர் (3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேர்)
யாழ். போதனா வைத்தியசாலையில் - 03 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் - 02 பேர்
நொதேன் சென்றல் ஹொஸ்பிற்றலில் - ஒருவர்
மன்னார் மாவட்டத்தில் - 04 பேர்
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர்
மன்னார் (NC) கடற்படை முகாமில் - ஒருவர்
மன்னார் (NW) கடற்படை முகாமில் - ஒருவர்
வவுனியா மாவட்டத்தில் - 02 பேர்
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (உயிரிழந்த 79 வயது மூதாட்டி)
நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் - ஒருவர்
மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (4 மாதங்களேயான பச்சிளம் ஆண் குழந்தை)
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, மன்னார், பருத்தித்துறை, வவுனியா